உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


அருளினால் நமக்கு மகப்பேறுண்டாயின் இப்போது கூறியதை நிறைவேற்ற இயலுமா என்பது பற்றி எனது உள்ளம் ஊசலாடு கின்றது.

தமக்கை :- நீ அதைப்பற்றிச் சிறிதும் கவலையுற வேண்டா; யான் அதில் உறுதியாகவே இருக்கின்றேன்; பார்த்துக் கொள்ளுகிறேன். பெருமாள் தான் நமக்கு அருள்புரிதல் வேண்டும்.

இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டு தண்ணீர்க்குடங்களுடன் தம் இல்லத்திற்குப் போயினர்; இச்செய்தியைத் தம் கணவனார்க்குக் குறிப்பாகக் கூட உணர்த்தவில்லை; மற்றையோரும் அறியார்.

சிலதிங்களுக்குப் பிறகு இருவரும் கருவுற்றுப் பத்தாந்திங்களில் ஒரே நாளில் ஒவ்வோர் ஆண்மகனைப் பெற்றனர். கந்தப்பையர் எல்லையற்ற மகிழ்ச்சி எய்தினர். மெல்ல மெல்ல ஓர் ஆண்டும் கழிந்தது. புலவர் பெருந்தகையார் தம் அருமைப் புதல்வர்களுக்கு ஆண்டு நிறைவு விழா நிகழ்த்திப் பெயரும் இடவேண்டும் என்று முடிவு செய்தார்; அப்போது, புதல்வர் இருவருக்கும் சரவணன், விசாகன் என்ற பெயர்களை வைக்க வேண்டுமென்றும் தம் கருத்தினை வெளியிட்டார். அச்சமயத்தில் அவருடைய மனைவியார் இருவரும் திருவேங்கட மலையில் எழுந்தருளியுள்ள திருமாலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒருநாள் தாம் வேண்டிக் கொண்ட பழைய நிகழ்ச்சியை எடுத்துரைத்துப் புதல்வர்களுக்குப் பெருமாள் பெயரை வைத்துத் தம் உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டுமென்று தம் கணவனாரைப் பணிவோடும் பரிவோடும் கேட்டுக் கொண்டனர். புலவர் பிரானும் தம் மனைவிமாரின் உணர்ச்சிமிக்க வேண்டுகோளை மறுக்கவில்லை; 'அங்கனமாயின் விசாகப் பெருமாள், சரவணப் பெருமாள் என்ற பெயர்களை நம் புதல்வர்களுக்கு இடுவோம் என்று கூறினர். அவர்களும் தம் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டு விட்டது என்று மகிழ்ந்தனர். பிறகு குறித்த நாளில் புதல்வர்களுக்கு அப்பெயர்களே இடப்பட்டன. ஆண்டு நிறைவு விழாவும் இனிது நிறைவேறியது.

முருகக் கடவுளுக்கு மயிலேறும் பெருமாள், ஆறுமுகப் பெருமாள், பன்னிருகைப்பெருமாள், சரவணப் பெருமாள்,