பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால் நான்கண்ணிரிலே கரைந்து பெருமூச்சிலே மிதந்து அவசரக்கார ஆடவர்களின் சந்தேக நெருப்பிலே வெந்து பதைத்துத் துடிக்கும் பாரதப் பெண்குலத்தின் தீனக்குரல்!

இராமன்

மன்னன் என்னும் பேராறு மக்கள் அணைக்கட்டின் மதகு வழியே செல்லக் கடமைப் பட்டது. மக்களின் கருத்தை மதித்து நடக்கும் மாண்புமிகு பேரரசை அமைப்பதே என் குறிக்கோள். அதுவே.இராம ராஜ்யம்.

சீதை

தத்துவார்த்தம் அரசியல் வாதிகளுக்கும் மதகுருக்களுக்கும் அடிக்கடி வரும் முறைக் காய்ச்சல்!

இந்த நாடு

தத்துவம் பேசிப்பேசியே சுடுகாடாகப் போகிறது.

97