பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

125


சதானந்தம் பிள்ளை புன்முறுவலோடு, ! என்ன முதலியார்வாள் கதை சொல்லுகிறீர்களா? அல்லது...."

மாசிலாமணி, "என்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்? நான் சொல்வது உங்களுக்கு வேடிக்கையாகத்தான் இருக்கும். உங்கள் பிள்ளையைப்பற்றி சொல்கிறேனே இல்லையோ! எப்போதும் தங்கள் கையிலுள்ள சரக்கைப் பற்றி-அது விலை மதிப்பற்றதாக இருந்தாலும் சரியான மதிப்புத் தெரியாது. பிறருக்குத்தான் அதன் நன்மை நன்கு தெரியும். சிவனைப் பற்றி நீங்கள் என்னமோ எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையாகச் சொல்கிறேன். அவன் படிப்பிலே பிரகஸ்பதியையும் தோற்கடிக்கக் கூடியவன்; சாதுரியத்திலே சாணக்கியனையும் விஞ்சியவன். அவன் காலத்திலே உங்களைவிடப் பன்மடங்கு பிரசித்தியாக இருப்பான். எதிர்காலத்திலே ஜெயப்பிரகாஷ் நாராயணன், சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு முதலிய தலைவர் களைப் போல இணையற்று விளங்கி நம் நாட்டுக்குப் பேரும் புகழும் வாங்கித் தருவான்; தெரியுமா!......"

"போதும்; போதும். முதலியார்வாள்! போதும்" என்று குறுக்கிட்டார் சதானந்தம்.

மங்கை இப்போதுதான் மூச்சைச் சரியாக விடலானாள். திலகவதியும் கீழே உட்கார்ந்து விட்டாள்.

தந்தையின் கடுமொழியைவிட மாசிலாமணி முதலியாரின் புகழ்மொழி சிவகுமாரனை மிகவும் கதி கலக்கியது. இந்த மனிதன் எதற்காக இவ்வளவு பீடிகை போடுகிறானே என்று அவன் அஞ்சினான்; ஆதலால் மெல்ல அவ்விடத்தை விட்டு நழுவிப் போக முயன்றான்.

இதைக் கண்டுவிட்ட மாசிலாமணி, "சிவா! எங்கே போகிறாய்? இரு, அப்பா! உன்னிடம் சில வார்த்தை சொல்ல வேணும்” என்று கூறி அவனைத் தடுக்கலானார்.

சதானந்தம், "அவன் போகட்டும், முதலியார்வாள்! அப்புறம் பேசிக் கொள்ளலாம்......” என்று கூறி அவனைப்