பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காத்மூடி 7 காற்ருடியின் முதுகிலே தொளை போட்டுக் கொண்டு முள் அசையாது நிற்கிறது. அது துன்பு தருகிறதா காதலர் கூட்டத்திற்கு இடைஞ்சல் சென் கிறதா, துணை செய்கிறதா என்று சிந்தித்துப் பு o கும்போது பெரிய பெரிய தத்துவ விசாரணைகள் லாம் உதயமாகி விடுகின்றன. எது விடுதலை, எது கட்டுப்பாடு என்ெ றல்ல்ாம் உள்ளத்திலே விவாதம் ஒட்டுவிடுகிறது. ஆல்ை இவற்றிற்கெல்லாம். காற்ருடி செவி சாய்க்கிறதா என்ன? அது ஒன்றையும் கவனியாது தான் பெற்ற இன்பத்திலே மூழ்கி மூச்சுக் கூட வாங்காமல் விச்சென்று தலைகால் தெரியாதபடி வட்டமிடுகின்றது. அது மட்டுமா? சுற்றும்போது அந்த ஒலை தனது சொந்த உருவத்தை இழந்து ஒ,ே வட்டம்ாகின்றது. இறைவனை அச்சாணியான் கொண்டு வாழும் ஞானிகளும் இப்படித்தான் தமது உருவம் இழந்து, இன்பப் பெருக்கிலே வட்டமிட்டுக் கொண்டிருக்கிருர்களாம். காற்ருடி சுற்றும்போது அதைக் கவனித்துப் பாருங்கள். மாயோன் கையில் 'திகிரி போன்ற ஒரு வட்டம் தோன்றுகிறதா? நன்கு கவனியுங்கள். அந்த வட்டத்திலே காற்ருடி இல்லாத இடமிருக்கின்றதா? தொட்டுக் காட்ட முடியுமா?. முடியாது. அது இறை வனப் போன்று எங்கும் நிறைந்து, ஆளுல் அதே சமயத்தில் ஓரிடத்திலும் இல்லாதிருக்கின்றது. சிறுவர்களுக்கு இவைபோன்ற ஆராய்ச்சிகளைப் பற்றிக் கவலையில்லை. அவர்களுக்குக் காற்ருடியின் வேகத்திலேதான் கண். காற்ருடி சுற்றுகிறது. சிறு வர்கள் அதைக் கண்டு உவகை மீறிக் குதிக்கிருச்கள் கை தட்டிக் களிக்கிருர்கள்.