இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குதிரை வீரன்
<poem>மன்றல் முடிந்தென்றன்
- மலர்க்கூந்தல் உம்கரத்தால்
அன்புடனே தீண்டுமுன்பு
- அமர்மூளப் பரியேறி
என்னைப் பிரிந்தெங்கோ
- ஏகினீர்: அந்நாளில்
சென்றபடை யின்றே
- திரும்பிடக்கண் டோடிவந்தேன்
அந்தோ நீர்மாண்டீரோ?
- அன்றேறி நீர்சென்ற
கந்துகத்தில் வேறொருவர்
- கண்ணெதிரே வந்தாரே.<poem\>
- இது சீனநாட்டுக் கவிதை ஒன்றின் தழுவல் சீன மக்கள் வீரம் மிகுந்தவரெனினும் நம் நாட்டினரைப் போலவே:அமைதியை விரும்புகின்றவர்கள்; போரை வெறுப்பவர்கள். புகழ் பெற்ற சீனக் கவிஞர்கள் பலர் போரைக் கண்டித்துப் பல கவிதைகள் இயற்றியுள்ளார்கள்.
198