பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குதிரை வீரன்

 <poem>மன்றல் முடிந்தென்றன்

மலர்க்கூந்தல் உம்கரத்தால்

அன்புடனே தீண்டுமுன்பு

அமர்மூளப் பரியேறி

என்னைப் பிரிந்தெங்கோ

ஏகினீர்: அந்நாளில்

சென்றபடை யின்றே

திரும்பிடக்கண் டோடிவந்தேன்

அந்தோ நீர்மாண்டீரோ?

அன்றேறி நீர்சென்ற

கந்துகத்தில் வேறொருவர்

கண்ணெதிரே வந்தாரே.<poem\>


இது சீனநாட்டுக் கவிதை ஒன்றின் தழுவல் சீன மக்கள் வீரம் மிகுந்தவரெனினும் நம் நாட்டினரைப் போலவே:அமைதியை விரும்புகின்றவர்கள்; போரை வெறுப்பவர்கள். புகழ் பெற்ற சீனக் கவிஞர்கள் பலர் போரைக் கண்டித்துப் பல கவிதைகள் இயற்றியுள்ளார்கள்.


198