பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 செல்லடா

ஆரடா அங்கே அணியைக் குலைத்தவன்? பாரடா முன்னல் பாரத னல்லநீ?-செல்லடா!

அங்கம் தளர்ந்தாலும் நெஞ்சம் தளராதே பொங்கும் குருதியில் புன்னகை செய்துநீ-செல்லடா!

நாற்பது கோடியும் நல்லின்பந் துய்த்திட ஆர்ப்பரித் தேயெழுந் தைக்கிய மாகநீ-செல்லடா!


             35