இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
செல்லடா
ஆரடா அங்கே அணியைக் குலைத்தவன்? பாரடா முன்னல் பாரத னல்லநீ?-செல்லடா!
அங்கம் தளர்ந்தாலும் நெஞ்சம் தளராதே பொங்கும் குருதியில் புன்னகை செய்துநீ-செல்லடா!
நாற்பது கோடியும் நல்லின்பந் துய்த்திட ஆர்ப்பரித் தேயெழுந் தைக்கிய மாகநீ-செல்லடா!
35