பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கார்த்திகைப் பிறை

கண்டதொரு காட்சி கற்பனைக்கு

              மெட்டுமோதான்?

நிலவின் இளங்கீற்று நான்

    கண்டேன்! நான் கண்டேன்!

உலக மகள்துதலில்

      உவமையில்லா பட்டமோ? பைங்கொண்டற் பார்வதியைப் பாகத்தில் வைத்துப்பின்

சங்கரளுர் தஞ்சடையில்

   தான்தரித்த தனிக்கலையோ? மதனன் இளவேனில் வருநாளில் 
                   தானேந்தப்

புதிதாய் அமைந்ததொரு

       பேரழகுப் போர்வில்லோ? கந்தருவச் சிறுமியர்கள் ககனப் 
                பெருங்கடலில்

உந்திவிளே யாடும் ஒடத்தின்

                 ஒளியுருவோ?

வானத் திடைத்தோன்றும்

     வடிவில்லாப் புன்சிரிப்போ?

காணக் கிடைக்காத

  கார்த்திகைமூன் ரும்பிறையே:

கலையொன்று கொண்டே

    கவின்பெருக்கி நிற்கின்றாய் அலையமுது தான்பெய்ய அன்று 
          வந்த பொற்கிண்ணீ! என்றெண்ணி நான்நிற்க 
      இளஞ்சிறுமி மின்வளைவு சென்று மறைந்திட்டாள் சிந்தை 
              திறைகொண்டே!
             87