இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அறிவு தெளிந்தேன்
தள்ளி இந்தக் கலக்கத்தை விட்டு நீ
தளர்வி லாமல்உழைத் திடு வாயெனக்
கொள்ளை கொள்ளும் நகைதவழ் பேச்சினில்
கூறினனந்த ஞானப் பொலி வினன்.
கூடி யாரும் உழைத்திடவந்திடார்:
குறும்பு பேசித் தடைபல சூழுவார்;
தேடில் எங்கணும் வீண்பழிச் சொல்லலால்
சிறிதும் இல்லை உதவியென் றேதினேன்.
கோடி இன்னல்கள் வந்திடும் என்றுநீ
குறுகி நின்று கணக்கிடு வாயெனில்
நாடி இன்னும் அநேகம் குவிந்திடும்
நன்மை காணல் அரிதெனச் செப்புவான்;
அச்சம் நீங்கித் தயக்கமும் தள்ளிநீ
ஆண்மை யோடுமுயன்றிடும் போதினில்
துச்சமாகும்எதிர்ப்பும்பகைமையும்;
தோழ ராகப் பலர்வந்து கூடுவார்;
மெச்சி யுன்றன் பணியினில் சேருவார்;
வெற்றி காணலாம் நிச்சயம்; ஆதலால்
கச்சைகட்டிப்புறப்படுவாயென்றான்
கலக்கம் நீங்கி அறிவு தெளிந்ததே.
93