பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

நம்முடன் விடுதலை பெற்ற ஏனைய நாடுகளிலே இல்லை அதற்குமாறாக, அங்கங்கே ராணுவ ஆட்சிகள் அச்சுறுத்தி வருவதையும் நாம் பார்க்கிறோம், “நான் பெறுவதற்கு பாடுபடுகிற இந்தியா ஏழையிலும் ஏழையரும் இந்நாடு தங்களுடையது என்று உணர்த்தக்க ஒரு இந்தியாவாக இருக்கும்,” என்று கூறிய அண்ணலின் வாக்கு படிப்படியாகப் பலிதமடைந்து வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியின் பத்தாண்டுச் சாதனைகளின் பணி அறிந்து, அப்பணியில் நம்பிக்கை வைத்து வாழ்த்துக்கூறி, ஒன்றுபட்ட தேசிய இன உணர்ச்சியுடன் தங்களது உயரிய வாக்குகளை அளித்த பொது மக்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறோம். வெற்றிமுகம் காட்டிய காங்கிரஸ் வேட்பாளர்கள் எல்லோருக்கும் நல் வாழ்த்துக் கூறுகின்றோம். அமையவிருக்கின்ற காங்கிரஸ் கட்சியின் புதிய அமைச்சரவையை ஆர்வத்துடன் வரவேக்கக் காத்திருக்கிறோம்.

வாழ்க நேருஜி! வாழ்க காமராஜ்! வாழ்க நம் பாரதத் தலைவர்கள்!