பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

தென்னைமரத் தீவினிலே...

வந்ததும், உங்களை அனுப்பி வைக்கிறேன். வேறு. என்ன விசேஷம்?” என்று எதிர் முனையில் காத்திருந்தார்.

பரமகுரு சுருக்கமாக வள்ளி இறந்தது பற்றி கூறினார்.

அன்று மாலை ஆறு மணிக்கு மாமா சொன்ன குணரத்னா வந்தார். பரமகுரு அவரைப் பார்த்ததில்லை, ஆதலால் கல்யாணிதான் பேசி என்ன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

எல்லாருக்கும் வேண்டிய துணிமணிகளையும் அவசியமான சாமான்களையும் மட்டும் கல்யாணி எடுத்துக் கொண்டாள். முக்கியமான அறைகளை எல்லாம் பூட்டிக்கொண்டு வேலைக்காரர்களிடம் வீட்டை ஒப்படைத்துவிட்டு, எல்லாரும் ஒரே காரில் ஓட்டலுக்கு கிளம்பினர்.

ஒட்டல் எலிசபெத்திற்குள் நுழையும்போதே அதன் அதிபர் தேவநாயகா. குணரத்னாவையும், மற்றவர்களையும் அன்புடன் வரவேற்றார். பொன்னம்பலம் போன் பண்ணியதாக பெருமையுடன் கூறியபடி அவர்கள் தங்குவதற்கு வசதியான அறைக்கு ஏற்பாடு செய்தார்.