பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

133

அருணகிரி தைரியம் சொன்னான். அங்குமிங்கும் தாறுமாறாக எரிந்து கொண்டிருக்கும் நெருப்பைத் தாண்டிச் சென்று வாசற்கதவை அகலத்திறந்து வைத்துவிட்டு வந்தான்.

குழந்தையை சுமந்தபடி ஓரமாக நிற்கும் லிசியாவின் கரத்தைப் பற்றி இழுத்தபடி “தைரியமாக வாருங்கள்; நாலே எட்டில் வாசல் வழியாக ஓடி வெளியே போய்விடலாம்” என்று அவளையும் இழுத்தபடி முன்னே சென்றான்.

அப்போது-

தெ-9