உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வைகைக் கரையின் ஓரமாக உள்ள வழிகளில் ஆங்கிலேயப் படைகளை நடத்திச் செல்ல வேண்டு மென்றும், அந்தப் படையில் இணைந்து கொள்வதற் கெனத் தீனது படையிலிருந்து ஒரு பகுதி வீரர்களை அனுப்பி வைப்பதாகவும் மருதுவின் விடுதலைப் போர் வீரர்கள் ஏறத்தாழ மூவாயிரம்பேர் மானாமதுரைக்கும் பார்த்திபனூருக்குமிடையே பல இடங்களில் முகா மிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும், கர்னல் அக்னியூ கர்னல் வெல்ஷூக்கு எழுதி, தந்திரமாகக் கையாள வேண்டிய யுத்த ரகசியங்களையும் குறிப்பிட்டிருந்த கடிதம்தான் உறங்காப்புலியின் மூலம் அனுப்பப் பட்டிருந்தது! அந்தக் கடிதத்தில் என்ன விஷயங்கள் அடங்கி யிருக்கின்றன என்று முன்னரே தெரிந்து கொள்ளா விட்டாலும் கூட எப்படியும் விடுதலை வீரர்களை வீழ்த்தக்கூடிய போர் உபாயங்கள்தான் அறிவிக்கப் பட்டிருக்கும் என்ற முடிவுக்கு வந்திருந்த வாளுக்குவேலி, அந்தக் கடிதம் கர்னல் வெல்ஷ் கையில் கிடைக்காமல் தடுத்து நிறுத்திடத்தான் கறுத்த ஆதப்பனை முடுக்கி விட்டிருந்தான். ஆங்கிலேய வீரர்கள் யாரும் கடிதத்தை எடுத்துக் கொண்டு தனியே சென்றால் சந்தேகமுற்று விடுதலை