உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 தலைஞர் மு. கருணாநிதி "சுந்தரி! நான் நிச்சயம் வருவேன்! ஆனால் ஒன்று! தான் வருகிறேன் என்பதற்கு அடையாளமாக, எனக்கு முன்பு உன் வீட்டிற்குச் சீர்வரிசைகள் வரும்; என்ன, புரிகிறதா? அதைக் கேட்ட சுந்தரியின் முகம் கவிழ்ந்தது! பூமிக்கு இன்னொரு நிலவின் தரிசனம் கிடைத்தது! அவளது கால் பெருவிரல்கள் தரையைக் கீறிக் கொண்டி ருந்தன! இல்லை; காதல் கல்விக்கான "அரிநமோத்து சிந்தம்" எழுதிக் கொண்டிருந்தன! அந்த எழிலார் திருவுருவை வாளுக்குவேலி, தனது இருவிழிகளால் பருகிக் கொண்டே நின்றான்! பின் பிரியா விடை பெற்றுச் சென்றான்! அவனை நினைத்துக் கொண்டே அவன் தங்கை கல்யாணி நாச்சியாருக்கு நடனப் பயிற்சியை நடத்திக் கொண்டிருந்தாள் வடிவாம்பாள்!