உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கலைஞர் மு. கருணாநிதி குறித்த நேரத்தில் விழாவுக்கு வந்துவிடுமாறு மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொண்டு கறுத்த ஆதப்பன் குதிரையிலேறிப் புறப்பட்டான். பட்டமங்கலம் பிள்ளையார் கோயிலைச் சுற்றிக் கொண்டு பாகனேரி செல்லும் பாதையில் குதிரை திரும்பிடும்போது பிள்ளையார் கோயில் சுற்றுச் சுவரில் இடிந்துபோன ஒரு மாடத்திலிருந்து ஆதப்பனின் நெஞ்சைக் குறிபார்த்தவாறு பாய்வதற்கு ஒரு ஈட்டி தயாராக ஓங்கப்பட்டிருந்தது! சுற்றுச் சுவரின் பக்கம் குதிரை வந்ததும் ஈட்டியைப் பிடித்திருந்த கை அதனை வீசத் தொடங்கியதுதான் தாமதம்; அதற்குள் அந்தக் கையைத் தடுத்து நிறுத்தியது மற்றொரு வீரனின் கை! 康康