உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 385 கொள்கிறேன்" என்று சிரித்துக் கொண்டே கூறியவன், நீயும் கொஞ்சம் ஒத்திகை பார்க்கிறாயா?... இல்லை நேராக அரங்கேற்றத்தையே ஆரம்பிக்கலாமா?" எனக் கேட்டுக் கொண்டே அவளை அணைத்திடத் தாவினான். அவள் சாதுர்யமாக விலகிக் கொள்ளவே அவனது தலை அங்கிருந்த தூண் ஒன்றில் நன்றாக மோதியது. அவன் தலையைத் தடவிக் கொள்வதற்குள், கல்யாணி அங்கே கிடந்த ஒரு கட்டாரியைக் கையிலே எடுத்து முது குப்புறமாக மறைத்துக் கொண்டாள்! கட்டாணி முத்தம் கேட்கிறேன்! நியோ கட்டாரியைத் தூக்கிக் கொள்கிறாய்! கல்யாணி! என் கையைத் தட்டிக் கட்டளையிட்டால் எனது காவல் வீரர்களின் ஈட்டிகள் முள்ளம்பன்றி சிலிர்த்தது போல் உன் முன்னால் காட்சி தரும்! கட்டாரியைக் கீழே போடு! கட்டியணைத்து என் கன்னத்தின் பசியை முதலில் தீர்த்திடு! வா, கல்யாணி வா! வைரமுத்தன் உனக்கு வழங்க வேண்டிய இன்பத்தையெல்லாம் சேர்த்து வழங்குகிறேன்! அனுபவித்துப் பார்த்தால் பிறகு அணுப் பொழுதும் என்னை விட்டுப் பிரியமாட்டாய்! இதில் என் சுயநலம்கூட இல்லை! "இம்" என்றால் ஆயிரம், "இச்" என்றால் பதினாயிரம் முத்தங்கள் கொடுத்து என்னை நித்தமும் திணற வைக்க, கூப்பிட்ட குரலுக்குப் பல கோதைகள் இருக்கிறார்கள் -நீ பருவப் புறா! பசியோடிக்கிறாயே என்ற பொதுநல நோக்கம்தான் எனக்கு!" இப்படிப் பேசிக் கொண்டே அவன் கல்யாணிமீது பாய்ந்து, அவள் கையிலிருந்த கட்டாரியைப் பிடுங்கிக் கொண்டான். ஓங்கி அறைந்தாள். அவளது சேலையை இழுத்துத் தனது கையில் சேலை முந்தானையைச் சுருட்டினான். அங்கிருந்த கலக்கல் மதுஜாடியை எடுத்து அவன் மீது வீசினாள். அதைத் தவிர்த்துக் கொண்ட உறங்காப்புலி, மூர்க்கத்தனமாக அவள் மீது பாய்ந்து