உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 77 கண்ணிலும் ஆதப்பன் கண்ணிலும் ஒரே சமயத்தில் காட்சி கொடுத்தது. பட்டமங்கலத்து அம்பலக்காரரின் வண்டி! உயர்ந்த சாதி காளைகள் பூட்டி, இருபுறங்களிலும் பட்டமங்கலம் என்று பட்டுத்திரையில் எழுதப்பட்டுப் பளபளப்பாக நின்று கொண்டிருந்தது அந்த முகாமின் வாசலில் அந்த வண்டி! ஒருவேளை கர்னல் துரை வல்லத்தரையனையும் அழைத்திருப்பாரோ என்று பாகனேரி சகோதரர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு, பெரிய கூடாரத்தை நெருங்கித் தாங்களிருவரும் வந்திருக்கும் செய்தியை வாயிற்காவலன் மூலம் உள்ளே சொல்லி அனுப்பினார்கள். உள்ளே போன காவலன் உடனடியாக வெளியே ஓடிவந்து 'துரை கூப்பிடுகிறார்” என்று கூறி அவர்களைக் கூடாரத்திற்குள் அழைத்துச் சென்றான். ஏககாலத்தில் அண்ணனும் தம்பியும் தங்கள் உடைவாட்களைத் தடவிக்கொடுத்து விட்டு உள்ளே நுழைந்தார்கள். 健康