பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. 147 றிருபது வருஷங்களுக்கு முன்னுள்ளவர். இவர் பரம் பரையிலுள்ளோர் இன்றுமுளர். இவர் அமைத்த திருக் குளம் சிதம்பரத்தி லே இன்றும் இவர் பெயரால் விளங்கு கின்றது. வைத்தியநாதநாவலர். இற்றைக்கு இருநூற்றறுபது வருஷங்களுக்கு முன்னே திருவா ரூரிலே அபிஷேகத்தார் மரபிலே அவ தரித்துத் தமிழ்க்கடல் குடித்துத் தமிழ்மாரி பொழிந்து விளங்கிய பண்டிதசிகாமணி. இவரே இலக்கண விளக்கஞ் செய்தவர். அந்நூலுக்குரையும் இவர் தாமே யெழுதினர். தொல்காப்பியத்துக்குப் பின்னர்த் தோன்றிய இலக்கண நூல்களுள்ளே இந்நூல் மிகச்சிறந்தது. இவர் காலத்திலே இவரோடு வாதம் புரியும் வன்மையில்லாதவராயிருந்து பின்னர் வன்மை படைத்த சிவஞான முனிவர் இலக்கண விளக்கத்தைக் கண்டித்து, இலக்கண விளக்கச் சூறா வளியென வொரு நூ லியற்றினர். அதனால் அது மறைந் தொழியாது இன்னும் ஒளிபெற்று நிலவுகின்றது சூறா வளி இலக்கண விளக்கத்தை மறுப்படுத்தாமல் தன்னை இயற்றிய சிவஞ னமுனிவரென்னும் கலாசந்திரனுக்கே களங்கமாயிற்று வைத்தியநாதநாவலர்க்குத் தொண்டை மண்டல சதகம் பாடிய படிக்காசுப்புலவர் மாணாக்கர். ஒருதுறைக் கோவை பாடிய அமிர்தகவிராயர் ஒரு காலத் தவர். வைத்தியநா தநா வலரைச் சுவாமிநாத தேசிகரே "தமிழ்க்கிலக்காகிய வைத்தியநாதன் என்று புகழ்வ ரென்றால் இவர் பெருமைக்கு வேறு சான்று வேண்டா . சிவஞான முனிவர் நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னர்த் திருவா வடுதுறை மடத்திலிருந்த ஒரு தம்பிரான். இவர் வட