பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழிவரலாறு. 165 ருள், இன்பம், வீடென்பன. அவற்றுள் வீடென் பது சிந்தையு மொழியுஞ் செல்லாநிலைமைத் தாகலின், துறவறமாகிய காரணவ கையாற் கூறப்படுவதல்லது இலக்கண வகையாற் கூறப்படாமை யின், நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம். அவற்றுள், அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம் வழக்குத் தண்டமென மூவகைப்படும். அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத் தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று அவ் வவற்றிற்கோ திய அறங்க ளின் வழுவாதொழுகுதல். வழக்காவது ஒரு பொருளைத் தனித்தனியே என தென தெ ன்றிருப்பார். அது காரண மாகத் தம்முண் மாறுபட்டு அப்பொருண் மேற் சொல்வது. அது கடன் கோடன் முதற் பதினெட்டுப்பதத்த தாம். தண்டமாவது அவ்வொழுக்க நெறியினும் வழக்குநெறியினும் வழீ இயினாரை அந்நெறி நிறுத்து தற்பொருட்டு ஒப்பநாடி அதற்குத் தக வொறுத்தல், இவற்றுள் வழக்குத் தண்டமும் உலகநெறிநிறுத்துதற் பயத்த வா வதல்லது ஒழுக்கம்போல மக் களுயிர்க்கு உறு திபயத் த ற்சி றப் பிலவாகலானும், அவை தாம் நூலானேயன்றி : உணர்வுமிகு தியா னுந் தேயவியற்கையானும் அறியப்படுதலானும், அவற்றையொ ழித்து, ஈண்டுத் தெய்வப்புலமைத் திருவள்ளுவராற் சிறப்புடைய ஒழுக்கமே அறமென வெடுத்துக்கொள்ளப்பட்டது. அது தான் நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபாடு டைமையின், சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புகளொழித்து, எல்லார்க்கு மொத்தலிற் பெரும்பான்மையாகிய பொதுவியல்புபற்றி இல்லறம் துறவறமென இருவகை நிலையாற் கூறப்பட்டது. அவற்றுள், இல்லறமாவது இல்வாழ்க்கை நிலைக்குச் சொல்லு கின்ற நெறிக்கணின்று அதற்குத் துணையாகிய கற்புடைமனைவியோ