பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. 21 யாளருமொவ்வொரு பெயரிட்டிருப்பார்கள். அங்ஙனம் பெயரிட்டிருப்பார்களாயின் ஒருபாஷைக்கு அனேக பெ யர்களுளவாகும். அங்ஙன மாகாது எல்லாப்பாஷையாள ரும் சம்ஸ்கிருத மென்னுமொரு பெயராலேயே அதனை வழங்குதலால் எல்லாப் பாஷைகளும் தத்தம் பெயரா லேயே வழங்குவனவென்பது சித்தாந்தமாம். ஆதலால் தமிழ் என்னும் பெயர் தமிழ்ச் சொல்லேயாம். இவ்வுண் மையறியாதார் தமிழ் என்னுஞ்சொல் திராவிடம் என் னும் வடசொல்லினின்றும் வந்ததெனக் கூறுவர். அதனை மறுத்துப் பின்னொருசாரார் வடமொழி தென்மொழியி லிருந்துண்டாயதென்று கூறுவர். அங்ஙனங் கொள்வது தொல்லாசிரியர் கொள்கைக்கு மாறாம்... அகத்தியர் வரு தற்கு முந்தி நிரம்பாமொழியாய்க்கிடந்த தமிழ் அக்கா லத்தே வேதசாத்திரங்களாற் சிறந்து விளங்கிய வடமொ ழியை யீன்றதென்பது தம்பி தமையனை யீன்றகதைபோ லாம். அதிபுராதன நூ லா யின் றுநின்று நிலவுந் தொல்கா ப்பியத்தின் கண்ணும் வடமொழியாக்க விதி கூறப்பட் டது. வடமொழி தென் மொழிக்கு வேண்டும்போதெல் லாம் சொல்லும் பொருளும் நூலும் கொடுத்து தவும் பெரும் பண்டாரமாகவும் அஃதுணராது வடமொழிக் குத் தாய்மொழி தென் மொழியென்பது ஆராயாதார் கூற்றாம். தமிழும் வடமொழியைப் போலச் சிவபெருமானால் முதனூல் செய்யப்பெற்ற மொழியாம். ஆதலின் தமிழும் வடமொழியைப் போலத் தெய்வத்தன்மை பொருந்திய மொழியாம். மகேசுவர சூத்திரம். மகேசுவர சூத்திரத்தைச் சிவபெருமான் தமது டம் ருகத்தினின்றுந் தொனிப்பித்தருளினார். அதனை வட