இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
122
விடைபெற்றுச் செல்லுமுன்
"தடை ஏதும் உளவோ"
என்று புதிய கருத்து
ஒன்று அவளிடம் தெரிவித்தான்
"திங்கள் ஒன்று தேவை
இல்லை ; இன்று
ஞாயிறு; இதே நாள்
இன்றே விடுதலை :
என் தோள் மீது
அமர்ந்தால் நாள்
எதுவும் காத்திருக்கத்
தேவை இல்லை :
அடுத்த கரையில்
எந்தக் கறையும்
இல்லாமல் சேர்க்க
முடியும்" என்றான்.
சிரிக்காத சீதை
சிறிது சிரித்து வைத்தாள் ;
"நீயும் ஒரு ஆண்மகன் ;
அதை நீ மறந்து
பேசுவது தகுமோ ?
அது மட்டும் அன்று ;
குழந்தையை வைத்துக்கொண்டு
குடக் கூத்து ஆடிய கதைதான் ;
நீயும் குடத்தை வைத்து
ஆடமாட்டாய்;
குழந்தையையும்
கீழே போடாமல்