பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122


விடைபெற்றுச் செல்லுமுன்
 "தடை ஏதும் உளவோ"
 என்று புதிய கருத்து
 ஒன்று அவளிடம் தெரிவித்தான்

"திங்கள் ஒன்று தேவை
 இல்லை ; இன்று
 ஞாயிறு; இதே நாள்
 இன்றே விடுதலை :

என் தோள் மீது
 அமர்ந்தால் நாள்
 எதுவும் காத்திருக்கத்
 தேவை இல்லை :

அடுத்த கரையில்
 எந்தக் கறையும்
 இல்லாமல் சேர்க்க
 முடியும்" என்றான்.

சிரிக்காத சீதை
 சிறிது சிரித்து வைத்தாள் ;
 "நீயும் ஒரு ஆண்மகன் ;
 அதை நீ மறந்து
 பேசுவது தகுமோ ?

அது மட்டும் அன்று ;
 குழந்தையை வைத்துக்கொண்டு
 குடக் கூத்து ஆடிய கதைதான் ;
 நீயும் குடத்தை வைத்து
 ஆடமாட்டாய்;
 குழந்தையையும்
 கீழே போடாமல்