இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
151
தீக்குளித்தல் என்பது
இந்த நாட்டுத் தீய பழக்கம்;
அடுக்கி வைத்த சிதையில்
படுக்க வைப்பர்; இதனை
உடன் கட்டை ஏறுதல் என்பர்.
மாமியின் கொடுமைக்கு அந்த
வீட்டு மருமகள் மண்ணெண்ணெயை
விரயமாக்குவது இன்றைய பத்திரிகைச் செய்தி.
அரசியல் காரணங்களுக்குத்
தொண்டர்கள் தீக்குளிப்பது.
இப்படி இந்தத் தவறான
கலாச்சாரம் பரதனையும் பற்றியது.
இராமனுக்குச் செய்தி எட்டியது ;
அவசரத் தந்தியாக
அனுமன் வந்தான் ;
தலைவர் வந்ததும்
பழச்சாறு பருகத் தந்தார் ;
உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
பினாமி ஆட்சியை
உரியவரிடம் சேர்த்தான் ;
நந்தியம் கிராமத்தை விட்டு
அனைவரும் நகர்ந்தனர் ;
இராமன் முடிசூடி
நாட்டுக்கு உயர்வு தந்தான்.
அயோத்தி இந்துக்களின்
புண்ணிய ஷேத்திரம் ;
அது இன்று அரசியலுக்குப்
பாத்திரமும் ஆகி உள்ளது.