பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 99 போல் இருக்கிறது என்று கருதினேன். எனவே, என்னால் உங்களுக்குத் தொல்லை இருக்கக் கூடாது என்று எழுந்து விட்டேன். நீங்கள் அவ்வாறு நடந்து கொண்டதற்குக் காரணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. நான் செய்த தவறு என்ன? விருப்பம் இருந்தால் நீங்கள் சொல்ல லாம் - இல்லாவிடின் நான் போகிறேன்'. 'என்ன இது வியப்பா யிருக்கிறதே! நீங்கள் என்னிடம் பலமுறை பேசினீர்களா? எனக்குத் தெரியாதே - நான் கவனிக்க வில்லையே! நீங்கள் பேசியதை நான் கவனித் திருந்தால் கட்டாயம் பதில் தந்திருப்பேனே திரும்பியும் பாராமல் இருக்க நான் என்ன அவ்வளவு கொடியவனா? நீங்கள் ஒரு சிறு தவறும் செய்திருப்பதாக எனக்கு ஒன்றும் தோன்றவில்லையே! அன்பு கூர்ந்து மனத்தை மாற்றிக் கொண்டு அமைதியாக அமருங்கள்!' நான் தங்களிடம் பேசியபோது நீங்கள் என்னைக் கவனிக்காமல் வேறு விதமாய் இருந்ததற்குரிய காரணத் தைத் தயைகூர்ந்து தெரிவிக்கலாமா?’’ ஒ, அதுவா? நான் இதோ தண்ணிரில் உள்ள வேலம் பாசிச் செடிகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் நீங்கள் என்னிடம் பேசியிருக்கிறீர்கள். நான் அந்தச் செடிகளின் வாழ்க்கை முறையைப் பற்றி ஆழ்ந்து சிந்தனை செய்து கொண்டிருந்ததால், உங்களைக் கவனியா திருந்துவிட்டேன். நடந்தது. இதுதான். நான் உங்களைக் கவனியாமல் உங்கள் மனத்தைப் புண்படுத்தியதற்காக மிகவும் வருந்துகிறேன். அன்புகூர்ந்து என்னை மன்னிக்க வேண்டுகிறேன்'. •, 'உண்மை அதுவானால், நீங்கள் வருந்தவும் தேவை யில்லை. நான் உங்களை மன்னிக்கவும் வேண்டியதில்லை'. "நான் சொல்வது உண்மை உண்மை!’