பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தெளிவு பிறந்தது!

சேகர் மிகுந்த கவலையுடன் மருத்துவ மனையுள் புகுந்தான். அங்குமிங்கும் அவன் கண்கள் எதையோ தேடின. ஆபரேசன் தியேட்டர் அருகே கவலையுடன் நின்று கொண் டிருந்த சிறு கூட்டத்தின் மீது அவனது பார்வை நிலைகுத்தி நின்றது. அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து இன்னும் முரளியை ஆபரேசன் தியேட்டரிலிருந்து வெளிக்கொண்டு வரவில்லை என்பது புரிந்தது.

மிகுந்த மனத்தளர்வுடன் அங்கிருந்து நகர்ந்து வாசற்படியை நோக்கி நடந்தான். ஏதோ இனம் புரியாத கவலைகள் அவன் மனதைக் கவ்விக் கொண்டிருந்தன. வாசற்படியை அடைந்தும் கூட வெளியேற மனமில்லாதவனாக அருகே கிடந்த பெஞ்சியில் சிறிதுநேரம் அமர்ந்தான்.