பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 10.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 காமத்துப்பால் நோக்குதல் காதலார் கண்ணே யுள' என்ருர் ஆசிரியர். இவர்கள் உள்ளத்திலே கள்ளத்தனம் உடையவர்கள் என்பதைக் காதலார்’ என்னும் சொல்லும், வெளியிலே 'அரிச்சந்திரன் ஆட்டம் ஆடுகிருர்கள் என்பதை ஏதிலார்' என்னும் சொல்லும் அறிவித்து நிற்பதை அறிந்து மகிழ்க. இவர்கள் பொதுகோக்கு நோக்குவது ஒருமுறையா? இருமுறையா? இல்லை, பல முறை-பற்பல முறையாம். இவ்வாறு வள்ளுவர் குறளில் சொல்லவில்லையே! இல்லை யில்லே சொல்லியிருக்கிருர். பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுள' என்னும் தொடரில் உள' எனப் பன்மையில் முடித்திருப்பதின் உட்கருத்து இதுதான்! 'உளது' என ஒருமையில் சொல்லியிருந்தால் ஒரு முறை நோக்கியதாகக் கொள்ளலாம். நோக்குதல் காதலார் கண்ணே யுள' என்றதால், காதலர்களிடையே பலமுனை நோக்கங்கள் கடைபெற்றமை புலகுைம். எனவே, இதனை ஒருமைபன்மை வழு என எவரும் எண்ணவேண்டா! இவர்கள் உண்மையில் ஏதிலரா யிருந்திருப்பின் ஒருமுறை நோக்கியதோடு விட்டிருப்பர். ஆனால், இவர்கள் விடாக் கண்டர் தொடாக்கண்டர்கள் ஆகிய காதலர்கள் ஆத லின், ஏதிலார்போல நோக்கும்போது பலமுறை நோக்கித் தான் இருப்பார்கள். இந்நுட்பத்தை 'உள' என்னும் பன்மைமுடிபில் அடக்கிக்காட்டிய திறனே திறன்! பரிமேலழகர் இந்தக் குறளேத் தோழி கூற்ருகக் கொண்டுள்ளார். சிவபூசையில் கரடிவிடுவது போல, முதல் கண்ணுறுகையிலேயே ( முதல் சந்திப்பிலேயே ) தோழி தலையிடுவதாக எங்த அகப்பொருள் நூலும்' சொல்லவில்லையாதலின், இதனைக் கவிக்கூற்ருகக் கொள்ள லாமே! அதனினும், தலைமகன் கூற்ருகவே கொள்ளலாமே! அவள் ஏதிலார்போலப் பொதுவாக நோக்குவதால் நம் மேல் காதல் இல்லை என்று பொருள் இல்லை; காதலே உள்ளே வைத்துக் கொண்டும் வெளியிலே அயலார் போல நோக்குவது உண்டு எனத் தலைமகன் தன் உள்ளத்துக்குச் சொல்லி ஊக்குவதாகக் கொள்ளலாமே இந்தக்குறளே! ஆகவே, அவள் அடிக்கடி நோக்கும் பொதுநோக்கத்தைக் கொண்டே, அவளுக்குத் தன்மேல் காதல் இருப்பதாகக் குறிப்பாய் அறிந்து கொண்டான் தலைமகன்.