இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தேனலைகள் 2947 முத்தாரம் ச்சி தழைத்துக் குலுங்கும் தண் மலர்ப் பொழில். ஆங்கு மழைக் கூந்தற்காரி-பேரழகி யொருத்தி ! அவள் இழைக்குப் பொன் வேய்ந்த துகில் பூண்டு நிற்கின்றாள், அணைக்கும் காதலனை அழைக்கும் கண் கொண்டு-கன்னங்களில் தேன் மொண்டு! கிள்ளை அவள் பெயர். பல், முல்லை ! இதழ், சர்க் கரை வில்லை ! அவனோ தமிழழகன். இளவணிகன். பருவ முகில் கூட்டும் கண்ணுடை யான். வளரும் மலைத்தோளுடையான், வளவன் மயில் ஆடுதற்கு பெயரால்! அவன், விற்காட்டும் புருவத்தாளை-தற் காத்துத் தற்கொண்டான் பேணுகின்ற கற்பு