பக்கம்:தேன்மழை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 122 சான்றோர் சீர்தளை கொண்ட செந்தமிழ்ச் செய்யுள் தொடுத்துக் காட்டிய தொகைநூற் புலவர்க்குக் கொடுத்துக் காட்டிய கூவத்து நாரணன் இடையறா தளித்த சடைய நாதன் தேம்பாது வழங்கிய பூம்பாவை முதலியார் நிறைந்த புகழாற் சிறந்தசீர் காழி அருணாசலக்கவி ராயரை ஆதரித்தே வரிசை யறிந்து வழங்கிய மணலி முத்து கிருட்டிண முதலிபோன் றோரும் சைவம் தழைத்திடத் தனிநூல் ஒன்றினைத் துக்கெனும் செய்யுளால் ஆக்கி அருளிய சேக்கிழார் அடிகளும் செஞ்சொல் கொஞ்சும் தஞ்சை வாணன் கோவைசெய் தருளிய - பொய்யா மொழியரும் பொன்விளை களத்தூர் புகழேந்திப் புலவரும் பொங்கு தமிழ்ச்சுவை தங்கிய பாடல்கள் தங்கிய பலநூல் பாடி அருளிய படிக்காசுப் புலவரும் நின்ற சொல்லராம் நெற்குன்ற வாணரும் உழலூரில் வாழ்ந்த சொல்லே ருழவராம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/125&oldid=926706" இலிருந்து மீள்விக்கப்பட்டது