பக்கம்:தேன்மழை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 440 சேந்தன் கரத்திற் சிக்கினாள் பரத்தை. அத்தனை பேரும் அகப்பட்டுக் கொண்டனர். பிணாவூர்! பிடிபட் டோர்தமைப் பிணைத் துக் கட்டியே உருவிய வாளினால் ஓங்கி வெட்டினான்! வென்ற வஞ்சகம் வீழ்ந்தது! விழாது நின்ற செங்கதிர் நெருப்பும் வீழ்ந்தது! பிழைபுரிந் தோரைப் பிணைத்துக் கட்டி இழுத்துச் சென்ற இடமென்ப தாலது 'பினாவூர் என்னும் பெயரைப் பெற்றது! நெஞ்சில் நிறுத்துங்கள் ! அறிவிற் சிறந்தோ னாயினும் காந்தவன் ஒழுக்கம் இழந்ததால் உயிரையே இழந்தான்! ஆயிரம் புதுமைகள் அமைந்தநூ லாயினும் அந்நூல் குறித்தொரு பயிரம் அவசியம். அதுபோல் ஒழுக்கமும் மாந்தர்க் கவசியம் பழுக்கும் பெருமை பெறவே ஒழுக்கம் வேண்டும் உலகத் தீரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/143&oldid=926724" இலிருந்து மீள்விக்கப்பட்டது