இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அணங்குகொல் கனத்த குண்டலம் காதில் அசைந்திட என்னெதிர் நிற்கும் ஏந்திழை இவள்யார்? எழுதா இயற்கை எழிலினால் என்னை வாட்டி வருத்தும் வனிதையோ ரணங்கோ? நிழல் வளர் சோலையில் நிற்பத னாலும் கனிந்தமென் சாயல் காட்டுவ தாலும் மரகதப் பச்சை மயிலோ? அதுவும் நன்குதேர்ந் தெடுத்த நாட்டியப் பறவையோ? நங்கையை என்னுளம் நாடுவதாலும் நுணுக்கமாய் இவளெனை நோக்குவ தாலும் மங்கையோ இந்த நங்கை யாரென் றையங் கொண்டே என்னுளம் மையல் வண்டென மயங்கும் கின்றதே !