இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதாவின் தேன்.மழை 194 வித்தைபல கற்றவரே தீராத் தீமை விளைத்துவந்த பிண்டாரிக் கூட்டம் தன்னை அந்திமரத் தின்பழத்தை நண்டின் கூட்டம் அடிவைத்து மிதிப்பதுபோல் மிதித்தீர்! இன்னும் எத்தனையோ அரியசெயல் புரிந்தீர்! தங்கள் இதயத்தில் நல்லெண்ணம் இருப்ப தாலே சித்திரத்தேர் தீப்பற்றி எரிதல் போன்ற தீச்செயலைத் தடுப்பீரென் றெண்ணு கின்றேன். இப்படிக்கு, இராசாராம் மோகன்ராய்