பக்கம்:தேன்மழை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217 மறைமலை அடிகள் நம்மொழிப் புலமை யெல்லாம் நடுத்தெருப் புலமை யாகும் செம்மொழி பேசி வந்த திருமறை மலையார் பெற்ற மும்மொழிப் புலமை யன்றோ முற்றிய புலமை; அன்னார் தும்மலும் கல்வித் தும்மல் ! துக்கமும் கல்வித் துக்கம் ! மறைமலை கற்ற நூற்கள் மற்றவர் கற்றா ரேனும் மறைமலை கண்ட நுட்பம் மற்றவர் கண்ட தில்லை ! மறைமலை இயக்கம் நாட்டின் வரலாற்றை வளர்க்கும் ! நாகை மறைமலை சேர்த்த கீர்த்தி வாடாத கீர்த்தி யாகும் ! முல்லைக்கோர் காடு போலும் முத்துக்கோர் கடலே போலும் சொல்லுக்கோர் கீரன் போலும் தூதுக்கோர் தென்றல் போலும் கல்விக்கோர் கம்பன் போலும் கவிதைக்கோர் பரணர் போலும் வில்லுக்கோர் ஒரி போலும் விளங்கினார் வென்றார் ! நின்றார் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/220&oldid=926801" இலிருந்து மீள்விக்கப்பட்டது