பக்கம்:தேன்மழை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



                                       இளவேனில் 
                                             (சிந்து)

முத்தம் கொடுப்பவளே-கொடி

     முந்திரி பூத்ததுபார் 

அத்தி மரக்கிளையின்-தளிர்

    ஆடும் அழகினைப்பார் 

குத்தும் மலையருகே-புறா

    கூவிக் குலவுதுபார் 

தொத்தும் பசுங்கிளியை-மயில்

    தூது விடுவதைப்பார் !





ஒத்த மனத்தினளே-குளிர்

     ஓடை முழவொலிபோல்

சத்தம் கொடுக்குதடி-மலை

      சந்தனம் சிந்துதடி 

முத்துச் சிரிப்பழகி-மலர்

    மூச்சு மணக்குதடி 

கத்தரிக் கோடையிலே-இளங்

     கத்தரி காய்க்குதடி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/29&oldid=495491" இலிருந்து மீள்விக்கப்பட்டது