இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
31
நிலா
வல்லிடை மங்கையரை வாட்டும்-ஒளி
வாங்கிவைத்து நம்மிடத்தில் காட்டும்-ஆமூர்
மல்லனென்பான் தோளைநிகர்
மாமலையின் உச்சியைப்போய் வாழ்த்தும்-தலை தாழ்த்தும்!
நல்லவர்தம் நட்பெனவே வளரும்-சில
நாளிலதன் ஈரவுடல் தளரும்-இன்பச்
சொல்லமுதப் பாவலரைத்
தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும் சோதி-வான் ஊர்தி!
மொட்டுமுல்லைக் கட்டவிழ்ந்தாற் போலே-வெள்ளி
முத்திரைமி தக்குதுபார் மேலே-மதி
வெட்டவெளி மிதினிலே
வெற்றிமன்னன் வெண்குடைபோல் விரியும்-நகை புரியும்!