பக்கம்:தேன்மழை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

                                                                                      நிலா


வல்லிடை மங்கையரை வாட்டும்-ஒளி

     வாங்கிவைத்து நம்மிடத்தில் காட்டும்-ஆமூர்

மல்லனென்பான் தோளைநிகர்

            மாமலையின் உச்சியைப்போய்
                           வாழ்த்தும்-தலை 
                           தாழ்த்தும்!





நல்லவர்தம் நட்பெனவே வளரும்-சில

     நாளிலதன் ஈரவுடல் தளரும்-இன்பச் 

சொல்லமுதப் பாவலரைத்

             தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும்
                        சோதி-வான் 
                        ஊர்தி!





மொட்டுமுல்லைக் கட்டவிழ்ந்தாற் போலே-வெள்ளி

      முத்திரைமி தக்குதுபார் மேலே-மதி

வெட்டவெளி மிதினிலே

                வெற்றிமன்னன் வெண்குடைபோல் 
                           விரியும்-நகை 
                           புரியும்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/33&oldid=495495" இலிருந்து மீள்விக்கப்பட்டது