பக்கம்:தேன்மழை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 அம்மி முதற்கட்டம் முற்றியது; மெச்சும் எச்சில் முத்திரைக்குப் பின்னேதும் நிகழ வில்லை. புதுச்சங்கத் தமிழ்போன்றாள்; வட்ட மிட்டுப் பூத்ததொரு பூப்போன்றாள்; அருகில் நின்று கதைசொன்னான், கட்டழகி கேட்டாள். பின்னர்க் கருங்குழலி மிளகாயை அரைத்துக் கொண்டே எதற்கத்தான் நாமிந்தக் கல்லை 'அம்மி என்கின்றோம் கூறுங்கள் என்று கேட்டாள். செம்பவழம் போன்றவளே மிளகாய் மஞ்சள் சிறுபூண்டு போன்றவற்றைக் குழவிக் கல்லால் அம்மியம்மி அரைத்திடவே உதவும் கல்லை அம்மிக்கல் என்கின்றோம் அன்பே என்றான். கொம்புமலர் போன்றவளோ அதனைக் கேட்டுக் குளத்துல்ர் போலாகி "இனிமேல் நீங்கள் அம்பலத்தில் கட்டுச்சோ றவிழ்ந்தல் போலே அனைவர்க்கும் தமிழ்விளக்கம் தார் என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/98&oldid=926913" இலிருந்து மீள்விக்கப்பட்டது