பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133


ஆகிட்டேனே? நான் துர்ப்பாக்கியசாலியாக ஆகிட்டேனே நான் ? - அவனும் நெஞ்சை பிசைந்து கொள்கிறான் ஒரு மாத்திரைப் பொழுது கழிந்ததும், அவன் பார்வதியை உடலும் உள்ளமும் அதிர்ந்து குலுங்க அண்டினான்: அவள் கால்மாட்டில் குத்துக்காலிட்டுக் குத்தியவாறு, அவளுடைய பொற் பாதங்களை பொற்புமிக்க பாதங் களை நடுங்டும் விரல்களை நடுங்காமலே தொட்டான் : என் அப்பாவும் அம்மாவும் செத்தவங்க பிழைச்சிட் டாங்க ; அதுமாதிரி பார்வதியை பெற்றவங்களும் பிழைச்சிருக்கப் படாதா?- பாவம், பார்வதி !’ புதிதான தொட்டுணர்விலே, புதிதாகப் பிறந்தவள் போன்றே, பார்வதி புதிய பாவனையுடன் எழுந்தமர்ந் தாள். செந்திலை நேர்கொண்ட பார்வையால் அளந்த படி, "நீங்களா ?’ என்றாள். கண்களில் பனி பெய்கிறது. செந்தில் சின்னப் பையனாகச் செருமினான். பாரு பாரு !... நீங்க மயங்கிச் சாய்ந்த நொடிப் பொழுதிலே, என் உயிரே போயிட்ட மாதிரி நான் தவிச்சுப் போயிட்டேனுங்க, பாரு !’ என்றான். பார் வதிக்கு விம்மத்தான் தெரிந்தது ! நடுக்காட்டில் கண்கட்டை அவிழ்த்துக் கொண்ட வ னாக மு. ரு ைக ய னி ன் அரவணைப்பில் சோகமே உருவாக அமைதி பூத்துக் காணப்பட்டான் ராமையா : அக்கா பார்வதி எழுதிக் கொடுத்த அவசரத் தந்தியைக் கமலி அக்காவுக்கு அனுப்புவதற்கு அவசரமாக வெளியே ஓடினான். - 帶