பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

台 ரொம்பத்தான் ; ஆனாலும் பொம்பளைங்களுக்கு இவ் வளவுதுணிச்சல் தேவைதானாக்கும்? என்பதாகத் தன்னுடைய மாமூலான பல்லவியைப் பாடியிருப்பாள்! பார்வதி சலனம் அடைந்தாள்! - கமலி ... பாவம். சொல்லப்போனா, ஆம்பளைங்களைக் காட்டிலும் பொம்பளைங்களுக்குத்தான், தைரியமும் துணிச்சலும் கூடுதலாகவே தேவைப்படும். ஏன்னா, இவங்களுக்குத் தான் இந்தத் தமிழ்ச்சமுதாயத்திலே சட்டங்களும் சம்பிரதாயங்களும் கட்டுப்பாடுகளும் கவனிப்புகளும் ரொம்ப ரொம்ப அதிகமாக விதிக்கப்பட்டிருக்கு; அதனாலேதான், இவங்களைச் சோதிக்கிற சோதிப் புக்களை எதிர்கொள்ளவும் எதிர்க்கவும் வெல்லவும் இவங்களுக்கு, அதாவது, பெண்களுக்கு துணிச்சலும் தைரியமும் அவசியமாகத் தேவைப்படும் - நிர்த் தாட்சண்யமான பிடிவாதத்தில் காலூன்றியவாறு, தலையைக் கம்பீரமாக நிமிர்த்தினாள் பார்வதி நழுவி விழுந்த மாரகச்சேலையைச் சீராக்கிக்கொள்ளத் தவறி விடவில்லைதான், விடியல்பாப்பாவுக்குக் கீழ்வானம் 'ஆராரோ... ஆரிரரோ பாடுவதை நிறுத்துகிறது; உலகநீதி பாடப் போகிறதாம்! வெளிச்சம் வந்து விட்டால், தன்னம்பிக்கையும் வந்து விடும் போலிருக்கிறது! மெய்சிலிர்த்தாள் பார்வதி; மெய் 'அக்கா அக்கா!' சின்னப்பயல் ராமையா கனவு கண்டு விழித்திருக்க வேண்டும் பாசக்கனவு கண்டிருப்பான். ஆர்வத்தோடும் ஆவலோடும் சுற்றும் முற்றும் பார்த்தவன், கமலியைக் காணாததால் ஏமாற்றம் அடைந்தவனாக, உதடுகள் துடித்திட மீண்டும் கிழிசல் பாயில் குப்புறப் படுத்துக் கொண்டான்.