15
ஓ ! டம்பப்பை சிரிக்கிறது.
நாய் வேஷம் ! சே ! ஆற்றாமை பாதியும் ஆத் திரம் பாதியுமாக அவள் தன்னைத்தானே நொந்து கொண்டாள். நாய்க்குப் போட்டியாக மனதிற்குள்ளேயே குரைத்துப் பார்த்துக் கொண்டாள். இப்போது அவளும் சிரிக்கிறாள்.
“ அம்மாடியோ பாருகுட்டி வாம்மா வந்து இட்டிலி சாப்பிடம்மா ; உனக்கு நாக்குக்கு ருசியா உப்பு முனைப்பாகப் போட்டுப் புதினா துகையல் தயார்ப் பண்ணி இருக்கேன்; வாம்மா !”
இந்தா வந்திட்டேன்; தம்பி சாப்பிட்டானாக் கும்!... அப்படின்னா, எனக்கும் நேரம் ஆச்சுத்தான். இதோ வந்துட்டேன்
நாலே நாலு இட்டிலிக்குக் கூட ஏப்பம் வரும் போலும் இதழ்க்கரையில் துளிர்த்த ஈரத்தை மட்டும் சேலை முந்தானை துடைத்துக் கொண்டது. ' உங்கள் வி ரு ப் ப ம் ரேடியோவில் ஒலிக்கிறது ; எதிரொலிக்கிறது.
'அப்பா, நான் போயிட்டு வாரேன் !
'பத்திரமாய்ப் போயிட்டு வாம்மா !”
போய் வச்றேன். அம்மா !'
"மகராசியாகப் போய்வா, பாருக்குட்டி!'
அதோ, புறப்பட்டு விட்டாள் குமாரி பார்வதி பி.ஏ. ...