பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72


தாரா - செந்தில் சம்பந்தப்பட்ட காதல் சிக்கலில் அநாவசியமாகச் சிக்கிக் கொள்ள இஷ்டமில்லை. வெளிப் படையாக மறுத்து விட்டாள். அந்நேரத்தில் தான் அம்மாவுக்கு .ெ ந ஞ் சு வலியென்று ராமையாப் பயல் ஓடோடி வந்தான் :- ஒ ... அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்திருக்கிறதே? - சரி, சரி; இனியும் தாமதித்தால் ஆபத்துதான் விவரத்தைத் தோழியிடம் சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தாள். சாக்குமூட்டை லாரி ஒன்று போதையுடன் தள் ளாடித் தள்ளாடிப் பறந்தது. என்னென்ன கள்ளக் கடத்தல் சாமான்கள் அங்கே வனவாசம் இருத்தனவோ ? “பாரு ! நீ நடந்து போவதா?-கூடாது; கூடாது; வண்டியிலே பின்னாடி ஏறிக்கொள்; உன்னை சந்திச்சுப் பேசணும்னு ரொம்ப நாளாகத் திட்டம் போட்டிருந் தேன்; உன்னையும் எங்க சோஷல் கிளப்பிலே மெம்பர் ஆக்கப்போறேன் ! -நீ உன்னோட துணிச்சலை ஒரு பெர் சண்ட் அளவுக்கு முதலீடு செஞ்சால் போதும்; உனக்கு தொண்ணுாற்றி ஒன்பது பர்சண்டுக்கு ஐசுவர்யம் வட்டி யும் முதலுமாக வந்து சேரும் ! அதைப்பற்றி எங்க பங்களாவிலே அப்புறம் சொல்றேன் ! - ம் ... ஏறு ! டைம் ஆகுது ப்ளீஸ் !' ரம்பையோ, இல்லை திலோத்தமையோ, பின் கதவைத் திறந்து விட்டாள். பார்வதி ஏனோ சற்றே தயங்கினாள் மறுமுறையும் மாதங்கியைக் கூர்மையாகப் பார்த்தாள் ; பார்வை யிட்டாள் ! - பூலோக ரம்பையாகப் பொலிந்த மாதங்கியின் விழிகளில் ஏதோ ஒரு சாகசமும் விரயமும் ஊடாடிக் கிடப்பதை இப்போது அவளால் தெளி வாகவே உணர முடிந்தது. மாதங்கியின் விழிகள் சிவப் பாகப் பளிச்சிட்டன. அவை கண்கள்தாமா ?... இல்லை