இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தைப்பாவாய் உங்கள் உறவுகள் ஊமைக் காவியம்! எங்கள் இதய மௌனச் செருக்கு! மெல்லிய நாக்கின் 'மியாவ்மியாவ்' அன்றி சொல்லோ,பாஷையோ வேறெதும் இல்லை! பயந்திடும் போதும் பசித்திடும் போதும் நயமாய் ஒலிக்கும் "மியாவ்! மியாவ்!' தானே! பேசுப் பேசியே பெற்ற வினாடிகளைத் தூசாய்; நஞ்சாய் ஆக்கு கின்ற மனித நாக்கின் மோசடிகள் எல்லாம், இனித்திடும் ரோஜா இதழ்களை அரைத்து தட்டியே வைத்தது போல இருக்கும் குட்டி நாக்குகளில் கொஞ்சமும் இல்லை! தனக்குநிகர் யாரென தருக்கிடும் மனிதனின் 23