பக்கம்:தொடுவானம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 என்ன இல்லை?

  பைரவி            ஆதி
           எடுப்பு

என்ன இங் கில்லையடா?-தனித்தாள என்ன இங் கில்லையடா?

      மேல் எடுப்பு

உன்னரும் திராவிடம் முன்னவர் சொத்தே இன்னும் தயக்கமேன் தென்னாட்டுச் சிங்கமே!

        அமைதி

பொன்னும் மணியும் செந்நெல் நன்செயும் உனக்குண்டே!பொங்குங் கடல் மலைகள் இயற்கை அரணாய்க் கொண்டே உன்னரும் திராவிடம் உள்ளது தொன்று தொட்டே! ஊராளத் தெரியாயோ -போர்முறை அறியாயோ? ஆக்கப் பொருள்களுண்டே!அறிஞர் பலரு முண்டே! அலைகடல் தாண்டிச் சென்று பொருளைவிளைப்பாருண்டே! காக்கும் கண்போன்றவர் தொழிலாளர் கூட்ட முண்டே! கவின்பெறு திராவிடம் அமையும் எழுச்சிகொள்ளே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/39&oldid=1320264" இலிருந்து மீள்விக்கப்பட்டது