பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எம்ஐ. குசுக (இ - ள்) ஒத்தாழ்ந்த ஓசையும், மண்டலித்து வரும் யாப்பும், (இரு சீரடியும் முச்சீரடியுமாகிக் குறைந்து வரும்) குட்டமும் நாற்சீரடிக்குப் பொரு يهبهم தி ைஎன்டர் ஆசிரியர் என்று. குட்டம் என்பதற்குத் தரவு எனப் பொருள் கொண்டார் இளம்பூரணர். இரு சீரடியும் முச்சீரடியும் ஆகிக் குறைந்து வருவனவற்றையே குட்டம் என்ற பெயரால் வழங்குதல் தொல் காப்பியனார் கருத்தா மென்பது பின்வரும் சூத்திரங்களால் இனிது விளங்கும் ள உ குட்டம் எருத்தடி உடைத்துமாகும். என்-எனின். மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் துத லிற்று. (இ- ள்) தாவு ஈற்றயலடி முச்சீரான் வரவும்பெறும் என்ற வாறு. எருத்தடியுடைத் தென்றதனானே ஈற்றயலடி முச்சீர் எனப் & பொருள்படுமோ எனின், ஆசிரியப்பாவின் ஈற்றயலடி முச்சீரான் வருதல் பெருவழக்காதலானும் இனிவருகின்ற சூத்திரம் தாக்கியலென ஒதுகையானும் இவ்வாறு பொருள்படுமென்று கொள்க." உதாரணம் முன்னர்க் காட்டுதும், இன்னும் குட்டம் என்பதனைத் தரவு கொச்சகமாகிய கொச்சக வொருபோகிற்குப் பெயராக வழங்கினும் அமையும், அவ்வழி ஒத்தாழிசை என்பதனை ஒத்தாழிசையெனத் தர. வெனத் தரவையுங் கூட்டிப் பொருளுரைக்கப்படும். (எம்.டி) 1. தரவு என்னும் உறுப்பின் ஈற்றயலடி முச்சீராய் வருதலும் உண்டு என்பார், குட்டம் எருத்தடியுடைத்துமாகும்' என்றார். குட்டம் தரவு. இங்கு எருத்தடி என்பதற்கு முச்சீர்த்தாய்வரும் ஈற்றயலடி எனப்பொருள் கொண்டமைக்குரிய காரணத்தைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்தது இவ் வுரைத்தொடராகும். ஆசிரியப்பாவின் ஈ:

றயலடி முச்சீரான் வருதல் பெரு. வழக்காதவானும் இனி வருகின்ற சூத்திரம் செந்துசக்கியல என ஒதுகையானும் ஈண்டு எருத்தடியென்றது. முச்சீர்த்தாய் வரும் ஈற்றயலடியினை எனக்கொண்டர் இளம்பூரணர். 2. இனி, மேற்குத்திரத்திற் குறிக்கப்பட்ட குட்டம் என்பதனைத் தரவு கொச்சகமாகிய கொச்சகவொருடோகின் பெயராகக்கொண்டு, அவ்வழி ஒத்தா. ழிசையும் தரவும் எனத் தரவையும் உடன்கூட்டி , 'ஒத்தாழிசையும் தரவும் மண்டிலயாப்பும் குட்டமெனப்படும் கொச்சகவொருபோகும் நாற்சீரடிக்குப் பொருந்தின' எனப் பொருளுரைத்தலும் பொருந்தும் என்பது இவ்வுரை ப்பகுதியின் கருத்தாகும்.