பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

105



கோவை மின்சார
மோட்டார் தொழிற்சாலை:

தொழிலியல் விஞ்ஞானியான ஜி.டி. நாயுடு 1939-ஆம் ஆண்டில் - கோவை நகரில், மின்சார மோட்டார் தொழிற்சாலை ஒன்றை, நேஷனல் எலக்ட்ரிக் ஒர்க்ஸ் என்ற பெயரில் துவக்கினார்.

அந்த மோட்டார் உற்பத்தித் தொழிற்சாலையை, அப்போது சென்னை அரசுத் தொழில் ஆலோசகராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சர்.ஜார்ஜ் போக் என்பவர் திறப்பு விழா செய்தார்.

அந்த நேரம் இரண்டாம் உலகப் போர் துவக்கப்பட்ட நெருக்கடியான காலம். அதனால் - வெளிநாடுகளிலே இருந்து மின்சார மோட்டார்களை வரவழைப்பது மிகக் கஷ்டமாக இருந்தது.

அதுமட்டுமன்று இதற்குக் காரணம். இந்திய நாட்டில் வேறு எங்கும் மின்சார மோட்டார்கள் உற்பத்தி செய்யப்படாத நேரமாகும்.

அப்படி இருந்தும், அப்போதைய இந்திய ஆட்சி தனது ஆதரவையும், ஒத்துழைப்பையும் திரு. ஜி.டி. நாயுடுவுக்கு வழங்கியது. அதனால், அவர் மின்சார மோட்டார் தொழிற் பற்றிகரமாகத் துவக்கி மின்சார மோட்டார் தொழிற்சாலையை வெற்றிகரமாகத் துவக்கி மின்சார மோட்டர்களைத் தயாரித்து வந்தார்.

யூனிவர்சல்
ரேடியேட்டர்ஸ்:

இந்த தொழிற்சாலையில் கார்கள், இஞ்சின்கள் ஆகியவற்றுக்கு தேவையான ரேடியேட்டர்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.

யு.எம்.எஸ். வானொலி;
தொழிற்சாலை:

மேற்கண்ட யு.எம்.எஸ். வானொலித் தொழிற் கூடம் 1941-ஆம் ஆண்டில் கோவை நகரில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் தொழிற்சாலையைத் துவக்கி வைத்தவர் யார் தெரியுமா?