பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 வல்லிக்கண்ணன்

 கலரும், கவர்ச்சியும் சேர்த்தாள். அதனால் அவனுக்குச் சிறிது மகிழ்ச்சிகூட.

இதை எண்ணி அவன் மகிழ்வுற்றிருந்த வேளையில் வந்து சேர்ந்தது ஒரு கும்பல். தெற்குக் கடைசி ஊர் ஒன்றிலிருந்து திருப்பதிக்கு வந்து விட்டு, மறுபடியும் சொந்த ஊருக்குப் பிரயாணமாகும் பெரிய குடும்பம் அது. குடும்பத் தலைவன், தலைவி, மாமியார், அம்மா, குழந்தைகள், பெரிய பெரிய பெட்டிகள், படுக்கைகள், மூட்டை முடிச்சுக்கள் எல்லாமாகச் சேர்ந்த இடம் முழு வதையும் அடைத்துக் கொண்டு நெருக்கடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டியது அக்கூட்டம்.

சிறிதுநேரம் வரைதான். பிறகு, மணி ஆக ஆக, வண்டி ஒட ஒட. இரவு நேரப் பயணிகள் எப்படி எப்படியோ விழுத்து கிடந்து, தூங்குவதில் உற்சாகம் காட்டுவது இயல்பு எனும் பொது விதி அங்கும் ஆட்சி புரியலாயிற்று.

அகலமில்லாத பெஞ்சுகளில், கிடைத்த இடத்தில், ஒடுங்கியும் கோணியும் படுத்துக் கிடந்தும், திரும்பியும் ஓய்வு பெற்றுக் கொண்டிருந்தார்கள் அவர்கள். அப்படித் துங்குகிறவர்கள் திரும்புகிற போதும், மீண்டும் மறுபக்கம் பார்த்துப் புரண்டு தூங்குகிற போதும் பெண்களின் பல விதத் தூக்க நிலைத் தோற்றங்களைக் கண்டு ரசிக்கக் கூடிய வாய்ப்பு விழித்துக் கொண்டிருக்கும் பிரயாணியான சிதம்பரத்துக்குக் கிட்டியது.

அதனால்தான் அவன் மனம் பார்வை விஷயமாக எண்ண அலை வீச நேர்ந்தது.

மனைவி என்னும் ஒருத்தியோடு தனி அறையில் தூங்கும் பழக்கமுடைய ஆண் கண்டு களிப்பதைவிட அதிகப்படியான அழகுக் காட்சிகளை, இன்டரஸ்டிங் போஸ்களை, ஆன்- இன்டன்ஷனல் வெளிச்சங்களை,