பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்வனி 蔷 "பணம் ஏதாவது முடையா ?' என்று கேட்டேன். No, no, no ". அவன் சிரிப்பின் அழுகையிலும் துக்கம் தொனித்தது. I am sorry.” "நான் இப்போ மாறிப்போற இடமும் காயமில்ல்ை. மறுபடியும் நாலு மாதத்துக்கெல்லாம் தூக்கிடுவாங்க. இந்தக் குருவிக்காரன் புளைப்பிலே இவளையும் பையனை யும் கூட எப்படிக் கட்டி இளுத்துக்கிட்டுப் போறது ? இவளைப் பிறந்த வீட்டுலே விட்டுடப்போறேன்’ நான் ஒன்றும் பேசவில்லை. நான் பேச என்ன இருக்கிறது : "அதுவும் தூரதேசமாப் போச்சு. அவருக்கு second wife. அந்தக் குழந்தை குட்டி வேறே. அதனாலே அவங் களையும் நான் குத்தம் சொல்ல முடியாது. ரொம்ப நாளா touch விட்டுப்போச்சு இல்லையா ? இருந்தாலும் எனக்கு வேறே வழி என்ன இருக்குது ? சொல்லுங்க”

சற்று நேரம் எங்களிடையில் பேச்சு எழவில்லை. நான் காத்திருந்தேன். 'ஸார், கலியாணி மூணுமாதமா ஸ்னா னம் பண்ணல்லே” -

பிறகு வார்த்தைகள் மளமளவெனக் கொட்டின. 'எனக்கு இதுதான் பெரிய wory, முதல் பிரசவமே ரொம்பக் கஷ்டமாப் போச்சு. வவுத்தைக் கிழிச்சுதான் எடுத்தாங்க. அப்பவே i க்கா ப் போயிட்டா. Complications வேறே. புளைச்சதே புனர்ஜன்மம். மறு படியும் கருத்தரிச்சு அதுவும் ஸிஸ்ரீயன் ஆச்சுண்ணா ஆளுக்கே டேஞ்சர்னு doctors சொல்லிட்டாங்க. என் wife பாக்கறதுக்கு என்னவோ ஆளாயிருக்கா. ஆனால் ரொம்ப weak. இதோ அவளைக் கொண்டுபோய் அவள் வீட்டில் விட்டப்புறம் எப்போ பாக்கப் போறேனோ? இது நிச்சயமானதிலிருந்தே மன்சு சரியாயில்லே. உங்க கிட்டேயாவது சொல்லிக்கலாம்னு வந்தேன்.'

i நான் ஊமையானேன்.