பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.காே.சண்முகம்

28


உண்ணும் உணவில் உவக்குமொரு காதலிலே
வண்ணமுரும் தொண்டில்வளர்தொழிலில்பண்ணுடனே
ஒன்றும் ஒருயாழாய் உன்னைக் கலந்துவிடு!
இன்றைக்கு மட்டும் இது!

ஊனும் நரம்பும் உரமுற் றெழில்கொழிக்க
ஆன வுடற்பயிற்சி ஆக்கிடுவாய்!-குனியாத
குன்றாய் நிமிர்ந்தே குவலயத்தை நோக்கிடுவாய்!
இன்றைக்கு மட்டும் இது!

கொட்டாவிச் சோம்பலதைக் கும்பிட்டனுப்பி விடு!
மொட்டாம் புதுச்செயலில் மூழ்கிடுவாய்- நிட்டையதில்
நின்றே புவியின் நிழற்கோலம் கண்டுதெளி!
இன்றைக்கு மட்டும் இது.

ஆகும் வழிகளில் ஆத்ம சுகம்காண
ஈகை அறங்கள் இயற்றிடுவாய்-நோகாதே!
வென்று வரும்வாயால் வெல்ல மொழிபேசு!
இன்றைக்கு மட்டும் இது!


2