உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 வஞ்சகமே உயிராக விளங்கி, சதிச் செயல்களே வீரமென நினைத்து, புற்களை வீரவாளாகக் கருதி, இறுமாப்புக் கொண்டு அச்சமில்லாமல் ஆணவமாக அரசாண்ட ஆரி யப் படையை இரத்த ஆறாக ஓட்டி, அவர்களின் தலை யிழந்த உடல்களைக் கழுகுகளுக்கும் நரிகளுக்கும் இரை யிட்டு, உடலிழந்தத் தலைகளை இடது காலால் பந்தாடி வீரப் பரணிபாடி வீரமாலை அணிந்த ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் குலத்திலே பூத்திட்ட மறத் திராவிடனே ! அழைப்பு! கால்முடக்கப்பட்டு, கையொடிக்கப் பட்டு, கழுத்துவளைக்கப்பட்டு, வாயடைபட்டு, உயிருக்கு மன்றாடும் திராவிடத்தின் உள்ளத்திலிருந்து பீறிட்டெ ழும் அவசர அழைப்பு ! ஏகாதிப்பத்தியத்தின் இருட்ட றையில் தள்ளி, 'இந்தியரனைவரும் ஒன்றே'யென்றும் ஈட்டியை மிடுக்குடன் வயிற்றிலே பாய்ச்சி, 'வகுப்புத் துவேஷம்' என்னும் இரும்புக் கரங்களால் குரல் வளை யைப் பிடித்து, பிதுங்கும் கண்களிலே அடக்குமுறை அம்புகளை எய்து மூச்சுவிடமுடியாமல் குற்றுயிருடனி ருக்கும் உன் தாயகத்தின் அபய அழைப்பு ! அன்று ஆகாயத்தை மோதும் மாட மாளிகை களிலே, விண்ணைமுட்டும் கூட கோபுரங்களிலே, தன் மானத்தை உயிரெனப் போற்றி சுயமரியதையை உட லெனக் கருதி தலைநிமிர்ந்து வாழ்ந்த வீரத் திராவிடன், இன்று அன்னிய ஆதிக்கப் பேய்களால் சூழப்பட்டு, அவைகளுடைய அடக்குமுறைப்படைகளால் முற்றுகை யிடப்பட்டு, 'எல்லோரும் இந்தியரே' என்றும் வஞ்சக இரும்புத் திரையிட்டு வடவர்களால் உன் செல்வம் பகி ரங்கமாகச் சூறையாடபட்டு அவதிப்படும் உன் தாய் நாட்டின் மகத்தான அழைப்பு ! 3