பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 147 11 12 13 14 15 16 எல்லாம் சதமெனக் கொள்ளாமல் எங்களைக் காத்தருள் யாஅல்லாஹ் தாக்கும் பிணிகளை தகர்த்திடுவாய் தாவும் பகைவனை தாக்கிடுவாய் தாழ்த்தும் குறைகளை நீக்கிடுவாய் தகைமிகும் தற்பரன் நீ அல்லாஹ் ஆர்த்திகை யகற்றி அடியருக்கும் அனுதின முந்தன் அருள் சுரக்கும் ஆதரித்தருள் புரிவாய் எமக்கும் ஆதி பராபரன் நீ அல்லாஹ் பெருகும் பிழைகளைப் பொருத்தருள்வாய் பேரருளா லெம்மை பொதிந்திடுவாய் பேரின்ப அமுதை புகட்டிடுவாய் பெரும்புக ளிறைவா யாஅல்லாஹ் உந்தன் நினைவால் உயரடைவோம் உன்றன் அருளால் பலனடைவோம் உன்னிடம் யாம் சரண் புகுவோம் உகப்புடன் அணைத்தருள் யா அல்லாஹ் வாய்மை மிளிரும் சன்மார்க்கம் வான் புவி எங்கும் செளபாக்கியம் வாழ்கவே அகங்களில் அருள்வாக்கியம் வாழ்வினில் வளம்பெறுவோம் அல்லாஹ் எங்கும் பொங்குக அருளின்பம் என்றும் நீங்குக பவதுன்பம் எங்கள் அகங்களில் ஒளிபிம்பம் என்றும் துலங்குக யா அல்லாஹ்