பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


‘நிலா நிலா வா வா’ என்று குழந்தைகள் பாடிப்பாடி மகிழும். அதாவது நிலா தன் அருகிலே வந்து விட்டது போல உணர்வுடன் ஆடும். ஆனால் நிலா வானத்திலே. பாடும் குழந்தைகள் பூமியிலே! அதுபோல, ‘பணமே புகழே வா வா’ என்று பலர் பாடிக் கொண்டேயிருப்பார்கள். பணமும் இராது. புகழும் வராது. அவர்கள் காலம் கடைசி வரை அப்படியே பாடிப் பாடி ஏங்கியவாறே அழிந்து போகும்.

நிலா எப்படி நம்மிடம் வராதோ, அப்படியே தான் பணமும், புகழும். உங்களுக்குத் தெரியுமே நிலாவை நாடி மனிதர்கள் தானே சென்றார்கள். அதற்கு எத்தனைக் காலம் முயற்சித்தார்கள்! முனைப்புடன் செயல் பட்டார்கள்! அப்படித்தான் நாமும் பாடுபட்டு முன்னேற வேண்டும்.

நேர் வழியில் பணத்தையும் புகழையும் ஈட்டியவர்கள் எல்லாம், எண்ணத்தால் முதலில் இலட்சிய வாதிகளாகி, பிறகு உண்மையுடன் உழைப்பைத் தொடர்ந்ததால் உயர்ந்தவர்கள் ஆனவர்கள்.

தனக்கு எதுவும் சரியில்லை. நேரமே அமையவில்லை, எனக்கு வாய்ப்பே இல்லை, நான் துரதிர்ஷடக் கட்டை, என்று புலம்புகிற தவளை வாயர்கள். பணத்தையும் புகழையும் மட்டும் இழக்கவில்லை, பிறர ஏளனத்திற்கு ஆளாகி, அவமானத்திற்குள்ளகின்றார்கள்.

எண்னத்தில் முழுமை செயலில் வலிமை செல்லும் பாதையை எளிமையாகவும் இனிமையாகவும்