உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுகிறோம் என்ற சமரசப் பேச்சு. ஒரு நண்பருடைய வீட் டிற்குச் சென்று யார் அந்நிய செலாவணிக் குற்றச்சாட்டைக் கண்டு பிடித்தார்களோ, அதே அதிகாரி அந்த நண்பருக்கு நீங்கள் இந்த அலுவலகத்திற்கு இந்த மாதிரி பதில் எழுதுங் கள் என்று சொல்லிக் கேட்கிறார். இந்த அளவுக்கு நிலைமை அங்கே. நான் பிரதமருக்கு இவைகளையெல்லாம் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக, தமிழ்நாட்டு மக்களுடைய உணர்ச்சியின் சார்பாக. இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு எடுத்துக் கூறுவது கடமை என்பதற்காகச் சொல்கிறேன். அரசியல் வாழ்வில் இருப்பவன் மீதெல்லாம் களங்கம் சுமத்தப்படுகிற காரணத்தால் அந்தக் கட்சியை அழித்து விட முடியுமா? ககாங்கம் சுமத்தினால் மக்கள் தீர்ப்புத் தர வேண்டாமா? ராஜமாணிக்கத்தின் வீட்டில் ரெய்டு நடத்துவது, மறுநாள் பத்திரிகையில் ராஜமாணிக்கத்தின் வீட்டில் சோதனை, பல லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது என்ற செய்தியைப் போடுவார்கள், ராஜமாணிக்கத்தைக் களங்கப்படுத்த வேண்டும். என்று செய்தியைப் போடுவார்கள். கோவை மாவட்டத்தில் கழகத்தின் பலத்தைக் குறைத்து விடவேண்டும் என்று இப்படிப்பட்ட காரியங்களில் இன்றைக்கு இங்கிருக்கக் கூடிய வருமானவரி அதிகாரிகள், என்போர்ஸ்மெண்ட் அதி காரிகள் போன்றவர்கள் ஈடுபடுவார்களானால் திராவிட முன் னேற்றக் கழகம் அவைகளைச் சந்திக்க வேண்டிய இடத்தில் சந்தித்துத் தீரும் என்பதை நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். இவைகளையெல்லாம். நிதானமாக நான் உணர்ச்சி வேகத்தில் பேசுகிறேன் என்று கருதாமல், பிரதமரைப் போன்றவர்கள், டெல்லியில் இருக்கும் முக்கிய மானவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தக் காரியங் களை யார் நடத்துகிறார்கள். யார் தூண்டுதலின் பேரில் இது நடைபெறுகிறது, அவர்கள் இன்றைக்கு ஆளும் காங் கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இந்த நாட்டிலே இருக்கிற சில கட்சிகளை அடகு வைக்க எண்ணி பிறகு இந்த நாட்டையும் வேறு ஒரு நாட்டிற்கு அடகு வைப்ப தற்கு. இன்றைக்குப் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நான் பகிரங்கமாக எடுத்துச் சொல்லமுடியும். ஆகவே இதில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதையும் நான் இந்த நேரத்தில் எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன். . முன் எனேற்றக் கழகம் மக்களுடைய செல்வாக்கை இழந்து விட்டது. ஆகவே அந்தக் கழகம் ஆட்சிப் பொறுப்பிலிருந்து றங்க வேண்டும் என்று டாக்டர் ஹாண்டே அவர்களும், பொன்னப்ப நாடார் அவர்களும் விவாத நேரத்தில் எடுத்துச்