பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

தெய்வீக ஒளியின் தலைவனே, முன்னரே பலர் அளித்துள்ள பாராட்டுகளை நாங்களும் வழங்குகிறோம். அவற்றை ஏற்றுக் கொண்டு எங்கள் எண்ணங்களை ஈடேறச் செய்க. (இருக் 3)

தெய்வீக மெய்யறிவின் நீரோடையே, இந்தப் பாராட்டுகளை உனக்கு நாங்கள் அன்பார்வமுடன் அளிக்கிறோம். அவற்றை ஏற்று எங்களை உன் அரவணைப்பில் வைத்துக் கொள்க. எவ்வாறு வழிப்போக்கனொருவன் மரத்தின் நிழலில் பாதுகாப்புத் தேடுகிறாளோ, அதுபோல் என்றும் நாங்கள் உன்னிடம் அடைக்கலம் புககின்றோம்.

(இருக் 7)

தெய்வீக ஒளி பொருந்திய அழகிய ஆன்மிக நீரோடையே, உன்னுடைய நல்வாழ்த்துகளின் பயனாக மக்கள் உடல் அளவிலும், மனஅளவிலும் ஊட்டம் பெறுகிறார்கள். எங்களுக்குப் புகலிடம் தருபவனே, அவர்களிடம் பரிவு காட்டு. உயிர் மூச்சுகளின்.தோழனே, உன்னிடம் அன்பு செலுத்துபவர்களுக்கு அனைத்து வளங்களும் வழங்குவாயாக. (இருக்7)

தெய்வீக ஒளியின் மங்களமான இந்த நீரோடை நமக்கு ஆன்மிக செல்வமளிக்கட்டும், குற்றங் குறையற்ற சுழித்தோடும் ஆன்மிக

வலுவளிக்கும் இந்த நீரோடை எங்கள் மேல்

புக்கறை காட்டட்டும் .

நற்றமிழில் நால் வேதம்