பக்கம்:நற்றிணை-2.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றின தெளிவுரை . 197 அரும்பும் அவிழ்ந்தது. அதனல் அம் மலைப்பக்க மெல்லாம் மணங்கமழ்வதாயிற்று. அத்தகையமலைச்சாரலைக் கொண்ட, குறுக்கிட்டுக் கிடக்கும், விளங்கும் மலைநாட்டிற்கு உரியவன் தலைவன்! அவன் அகன்ற மார்பானது தீயையும் காற்றையும் ஆகாயமானது ஒருங்கே பெற்ருற்போலத் துன்ப்மாகவும் இன்பமாகவும் அதுதானே ஆயிற்றுக்காண். இது பொய் யன்று என்றும் நீதான் அறிவாயாக! கருத்து: தீயாக வரு த்தித் துயர்தந்த அவன் மார்பே, இதுபோது மென்காற்ருகி இன்பமும் தருவ தாயிற்று என்பதாம். சொற்பொருள் : வளி-காற்று. நோய்-பிரிவாலுண்டாகும் காமநோய். இன்பம்-அணேத்து மகிழ்தலால் அடையும் இன்பம். மாயம் - பொய்ம்மை. எருவை - கொருக்கச்சி. தொன்று உறை துப்பு-பழைமையாக உண்டான பகைமை. முரண்-மாறுபாடு. செப்புடை-சிவந்த புறப் பகுதி. 'காந்தள் என்றது செங்காந்தளே. இலங்குதல்-விளங்குதல். உள்ளுரை: காந்தள் சிலம்பிடமெங்கும் கமழும் என்றது, தலைவனது அன்பு கலந்த இல்வாழ்க்கையின் செவ்வி அவனுரரினராலும் தலைவியின் ஊரினராலும் உவந்து பாராட்டப்பெறும் சிறப்பினது என்பதாம். விளக்கம் : அவன் பரந்த மார்பை விசும்புக்கும், பிரிவுப் பெருநோயை தீக்கும், உடனுறைந்து தரும் இன்பத்தை வளிக்கும் பொருத்திக் காண்க. வெம்மையை ஆற்றும் வளி என்று கொள்க. 'மாய்ம்' என்றது இல்லாத ஒன்றை உள்ளது போலத் தோன்றக் காண்டல். காந்தள் முகை யானது புலியைக் கொன்ற குருதிக்கறை படிந்த யானைக் - கோடு போலத் தோற்றுமாயினும், அதுதான் எத்தகைய வன்கண்மையும் இல்லாததாய், சிலம்புடன் நறுமணம் கமழும் நற்செயலையே_செய்தலைப்போலத், தலைவனும் கொடியவனேபோலப் பிரிவுப் பெருநோயால் வருத்தமுறச் செய்யினும், அதனைப் போக்கி, மென்காற்றென வந்து அணைத்து இன்பம் செய்வானுக அமைந்தனன் என்பதாம். தலைவியை T எண்ணி வருந்திய தோழியானவள் அவள் நடத்திய இல்வாழ்க்கைச் செவ்வியைத் கண்டு மகிழ்ந்து கூறுகின்ருள் என்றும் கொள்க. தோழிக்குத் தலைவி கூறுவ தாகவும் உரைக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/201&oldid=774202" இலிருந்து மீள்விக்கப்பட்டது